சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
சேலம்: சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 8வது மேல்மட்ட மதகில் இருந்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் 3 நாட்களில் கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவத்தை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் துவங்கி செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் நடவுப்பணிகள் முடிவடைந்திருக்க வேண்டும். இதற்காக ஜூன் 12ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாகவே ஆகஸ்ட் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு செப்டம்பர் 20ம் தேதி முதல் டெல்டாவுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இன்று காலையில் 8வது மேல்மட்ட மதகில் இருந்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து விட்டார். மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் 3 நாட்களில் கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பாவில் வழக்கமாக சாகுபடி செய்யப்படும் நீண்ட கால ரகங்களை சாகுபடி செய்ய இயலாது. மத்திய கால ரகங்களைத்தான் சாகுபடி செய்ய முடியும். இன்னும் காலதாமதம் ஆனால் குறுகிய கால ரகங்களை விதைக்கும் நிலை ஏற்படும். தாமதமாக சம்பா சாகுபடியை துவங்குவதால் வடகிழக்கு பருவமழையின்போது பயிர்கள் 3அடிக்கும் மேல் வளரவில்லை என்றால் மழை நீரில் சம்பா அழுகும் நிலை உருவாகும்.

தஞ்சை மாவட்டத்தில் 46,500ஏக்கரில் மட்டுமே நேரடி நெல் விதைப்பு நடந்துள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் வெண்ணாற்று பாசன பகுதிகளில் இதுவரை 3.5லட்சம் ஏக்கரில் நேரடி விதைப்பு நடந்துள்ளது. இன்னும் நேரடி விதைப்பு நடக்க உள்ளதால் 5 லட்சம் ஏக்கர் நேரடி விதைப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணியை துவங்க ஆற்றுபாசன விவசாயிகள் தீவிரம் காட்டிவருகின்றனர்.
பொதுவாக சம்பா சாகுபடிக்கு தினமும் ஒன்னேகால் டிஎம்சி வீதம் நூறு நாட்களுக்கு 125 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். ஆனால் மேட்டூர் அணையில் இப்போது 48.556 டிஎம்சி மட்டுமே உள்ளது. அதில் 20டிஎம்சி குடிநீருக்காக அணையில் இருப்பு வைக்க வேண்டும். இதனால் இப்போது 100 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இன்று தண்ணீர் திறக்கப்பட்டாலும் அதை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்து, அதன் பிறகு மழை பொய்த்துவிட்டதால் விவசாயிகள் பாதிக்கபடுவார்கள்.
மேட்டூர் அணையில் இருந்து தினமும் வினாடிக்கு 20ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால்தான் கடைமடை வரை தண்ணீர் வந்தடையும். இல்லை எனில் சம்பா சாகுபடிக்கு உதவாது. இதனால் டெல்டாவில் 13லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி பாதிக்கும் என்பது விவசாயிகளின் அச்சம். அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு திட்டத்தை அரசே கொண்டு வந்து அதற்கான பிரீமியத்தை அரசே செலுத்த வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications