எம்ஜிஆர் இல்லம் வெள்ளத்தில் சிக்கியது.. காதுகேட்க முடியாத குழந்தைகள் 100 பேர் உதவிக்காக தவிப்பு
சென்னை: மறைந்த எம்ஜிஆர் வசித்த ராமாவரம் இல்லம் வெள்ளக்காட்டில் சிக்கியுள்ளது. அங்குள்ள வாய்பேச முடியாத, காது கேட்க முடியாத குழந்தைகள் சுமார் 100 பேர் உள்ளே சிக்கியுள்ளனர்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் இல்லம் சென்னை ராமாவரம் பகுதியிலுள்ளது. அவரது குடும்பத்தார் அங்கு தங்கியுள்ளனர். மேலும் காது கேட்காதோர், வாய் பேசமுடியாத மாணாக்கர்கள் அங்கு தங்கியுள்ளனர்.

இந்நிலையில், அந்த எம்ஜிஆர் கார்டன் பகுதியில் 23 அடிக்கு தண்ணீர் நிற்கிறது. இதனால், சுமார் 100 மாணாக்கர்களும், ஊழியர்களும், 2வது மாடியில் சிக்கியுள்ளனர். யாராவது வந்து காப்பாற்றமாட்டார்களா என்று அவர்கள் ஏங்கியபடி உள்ளனர்.
படகு உதவிக்கு அழைக்கவும் :
தேனாம்பேட்டை - 9445190009 ஆலந்தூர் - 9445190012
வலசரவாக்கம்- 9445190011
#chennairainshelp #chennairains
— Gøωthâϻ (@IamGK24) December 2, 2015 எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, 1985ம் ஆண்டு ஒருமுறை வெள்ளக்காடாக இவ்விடம் மாறியபோது, படகில் மீட்டு செல்லப்பட்டு, கன்னிமரா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நினைவு கூர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications