அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெ. சிலைகள் அகற்றம்.. வாணியம்பாடியில் பரபரப்பு
அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அகற்றப்பட்டதால் வாணியம்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்: வாணியம்பாடி அருகே செட்டியப்பனூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளை நெடுஞ்சாலை துறையினர் திடீரென அகற்றினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பஞ்சத்துக்குக்கு உட்பட்ட ஊர் நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலையும், அதன் அருகே எம்ஜிஆர் சிலையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி ஜெ.பிறந்த நாளில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சிலைகளுக்கு அப்பகுதியை சேர்ந்த அதிமுகவினர், பொதுமக்கள் மாலை அணிவித்தனர்.

இதனிடையே அனுமதியின்றி நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் 2 சிலைகள் வைக்கப்பட்டிருந்ததால் அதனை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைதுறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் தாசில்தார் முரளிகுமார் தலைமையில் வருவாய்துறையினர் மற்றும் மாநில நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் மற்றும் வாணியம்பாடி தாலுகா போலீஸார் முன்னிலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலிலதா, எம்ஜிஆர் சிலைகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications