கோவில்பட்டியில் ”ஆவின்” பால் வேன் மோதி இளைஞர் பரிதாப பலி!

Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி: கோவில்பட்டி மந்தித் தோப்பு சாலையில் நேற்று ஆவின் பால் ஏற்றி வந்த வேன், பைக் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் தங்கச்சாமி மகன் சுப்புராஜ். கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள டாடா சுசிகி நிறுவன அலுவலகத்தில் சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவாக பணிபுரிந்து வந்த இவர் நேற்று வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

Milk van hit a man and he died

அப்போது மந்தித்தோப்பு சாலையில் சென்று கொண்டிருந்த போது கோவில்பட்டி பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்திலிருந்து வந்த பால் வேனை முந்த முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் சுப்புராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இறந்த சுப்புராஜுக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், அஸ்வின் என்ற மகனும் உள்ளனர். தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸார் சடலத்தை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநர் கோவில்பட்டி அறிஞர் அண்ணா நகரைச் சேர்ந்த வெ.ராமசாமியை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+