என் மருமகனைக் காப்பாத்த முடியாமப் போச்சே.. கதறி அழுத அமைச்சர்
சென்னை: தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் மருமகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்கின்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கதறி அழுதார்.
தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தங்கை முருகேஸ்வரியின் கணவர் தியாகராஜன். இவர் புற்றுநோய்க்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பலியானார். இந்த நிலையில் இவரது மகன் சுரேஷுக்கும் சமீபத்தில் புற்றுநோய் தாக்கியது தெரிய வந்தது. குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

22 வயதேயான சுரேஷுக்கு சமீபத்தில் வயிற்று வலி முற்றியது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. சுரேஷின் இறுதிச் சடங்கின்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதைச் சொல்லி சொல்லி அழுதார். எத்தனையோ நவீன வசதி இருந்தும், என் மருமகனின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என்று கூறி அவர் கதறி அழுதது அங்கிருந்தோரை நெகிழச் செய்தது.












Click it and Unblock the Notifications