நாக்கு அழுகி விடும் என கூறுவதற்கு பதில் நாக்கை அறுப்பேன் என கூறிவிட்டேன்- அமைச்சர் துரைக்கண்ணு
Recommended Video

சென்னை: நாக்கை அறுப்பேன் என வாய் தவறி கூறிவிட்டேன் என்று அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு திமுக- காங்கிரஸ் கட்சிகளே காரணம் என அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. தேனி, புதுக்கோட்டை, தஞ்சை என மாவட்ட தலைநகரங்களில் அதிமுக கண்டன பொதுக்கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது.

அறுத்துவிடுவோம்
அப்போது வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறுகையில் யாரைப்பார்த்து லஞ்ச ஆட்சி என்கிறாய், குற்ற ஆட்சி என்கிறாய், தவறாய் பேசுகிறாய். தப்பாய் பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம். ஜாக்கிரதையாக இருங்கள்.

முதல்வர்
இது உத்தமர் ஆட்சி. ஜெயலலிதா வழியில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா என்னென்ன செய்ய வேண்டும் என எண்ணினார்களோ அதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் செய்து வருகின்றனர் என்று அமைச்சர் துரைக்கண்ணு பேசினார்.

துரைக்கண்ணு
இதற்கு கண்டனங்கள் எழுந்தன. தானும் அதிமுக அரசை விமர்சனம் செய்துச பேசியுள்ளேன், தனது நாக்கையும் அறுப்பார்களா என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியிருந்தார். அதுபோல் பாமக நிறுவனர் ராமதாஸும் 7 கோடி பேரின் நாக்கை அறுக்கும் துணிவும் தெம்பும் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு இருக்கிறதா என்று கேட்டிருந்தார்.

விளக்கம்
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்பட்டது. இதுகுறித்து அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில் நாக்கை அறுப்பேன் என வாய் தவறி வந்துவிட்டது.

நாக்கை அறுப்பேன்
யாரையும் குறிப்பிட்டு அந்த வார்த்தையை கூறவில்லை. அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நாக்கு அழுகிவிடும் என கூறவந்தேன் ஆனால் வாய் தவறி நாக்கை அறுப்பேன் என்று கூறிவிட்டேன் என அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம் அளித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications