முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்! - கமலை வெளுக்கும் அமைச்சர் ஜெயக்குமார்
Recommended Video

சென்னை: கமல் ஹாஸன் 100 நாளில் முதல்வராக, அரசியல் ஒன்றும் சினிமா அல்ல... முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும். மற்றதை அப்புறம் பார்த்துக்கொள்வோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கமல் ஹாஸன் அரசியல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கூறுகையில், "மறைந்த தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, எதிர்க்கட்சி தலைவராக இருந்து மக்களுக்கு சேவை செய்தனர். யாரும் 100 நாளில் முதல்வராவேன் என்று சொல்லவில்லை. சினிமா 100 நாள் ஓடுவதுபோல் கமல்ஹாசன் முதல்வர் ஆவேன் என்று கூறுகிறார். முதல்வர் பதவி என்பது மூர் மார்க்கெட்டில் விற்பனை செய்யும் பொம்மையா? மக்கள் அங்கீகாரம் செய்ய வேண்டும், மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நடிகர் சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்து ஒரு எம்.எல்.ஏ.வாகக் கூட முடியவில்லை. கூட்டம் கூடுவதை வைத்துக்கொண்டு முதல்வர் ஆவேன் என்று சொல்ல முடியாது. முதலில் இவருக்கு கூட்டம் வருகிறதா என்று பாருங்கள். அப்படி வந்தாலும் அது ஓட்டாக மாற வேண்டும். ஓட்டாக மாற மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ட்விட்டரில் மட்டும் இருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
அடிப்படையில் மக்களை சந்தித்து, மக்களோடு மக்களாக அவர் இருந்து நல்லது செய்ய வேண்டும். முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும். மற்றதை அப்புறம் பார்த்துக்கொள்வோம்," என்றார்.












Click it and Unblock the Notifications