'சோடா பாட்டில்' ஜீயருக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம்
சோடா பாட்டில் வீச எங்களுக்குத் தெரியும் என்று ஜீயரின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: சோடா பாட்டில் வீசவும் கற்களை எறியவும் எங்களுக்கும் தெரியும் என்று வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜ ஜீயர் பேசியது கண்டனத்துக்குரியது என்று அமைச்சர் ஜெயக்குமார்
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தினசரி பத்திரிகை நடத்திய ஒரு நிகழ்ச்சியில் ஆண்டாள் குறித்து மேல் நாட்டவர் எழுதிய கருத்தை வைரமுத்து மேற்கோள் காட்டியது தவறான அர்த்தத்தை குறிப்பதாக இருந்தது. இந்நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக ஜீயர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் ஜீயர் பேசுகையில், எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும், கற்களையும் வீச தெரியும். ஆனால் அவற்றை நாங்கள் செய்ய மாட்டோம். இறை நம்பிக்கைக்கு எதிராக யார் வந்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று ஜீயர் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பேசி வரும்நிலையில் ஜீயருக்கு எதிராக சமூகவலைதளங்களிலும் கருத்துகள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சோடா பாட்டில் வீசுவோம் என்று ஜீயர் பேசுவது பொறுப்புள்ள பேச்சு இல்லை.
சோடா பாட்டில் வீசுவோம் என்று யார் கூறினாலும் அது கண்டனத்துக்குரியது. ஜீயரின் பேச்சு வன்முறையை தூண்டுவது போன்றே உள்ளது என்றார்
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications