For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சோடா பாட்டில்' ஜீயருக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம்

சோடா பாட்டில் வீச எங்களுக்குத் தெரியும் என்று ஜீயரின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சோடா பாட்டில் வீசவும் கற்களை எறியவும் எங்களுக்கும் தெரியும் என்று வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜ ஜீயர் பேசியது கண்டனத்துக்குரியது என்று அமைச்சர் ஜெயக்குமார்

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தினசரி பத்திரிகை நடத்திய ஒரு நிகழ்ச்சியில் ஆண்டாள் குறித்து மேல் நாட்டவர் எழுதிய கருத்தை வைரமுத்து மேற்கோள் காட்டியது தவறான அர்த்தத்தை குறிப்பதாக இருந்தது. இந்நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக ஜீயர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Minister Jayakumar condemns Jeeyar's Soda bottle comment

வில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் ஜீயர் பேசுகையில், எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும், கற்களையும் வீச தெரியும். ஆனால் அவற்றை நாங்கள் செய்ய மாட்டோம். இறை நம்பிக்கைக்கு எதிராக யார் வந்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று ஜீயர் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பேசி வரும்நிலையில் ஜீயருக்கு எதிராக சமூகவலைதளங்களிலும் கருத்துகள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சோடா பாட்டில் வீசுவோம் என்று ஜீயர் பேசுவது பொறுப்புள்ள பேச்சு இல்லை.

சோடா பாட்டில் வீசுவோம் என்று யார் கூறினாலும் அது கண்டனத்துக்குரியது. ஜீயரின் பேச்சு வன்முறையை தூண்டுவது போன்றே உள்ளது என்றார்

English summary
Minister Jayakumar condemns Jeeyar's Soda bottle comment. He also said it is irresponsible speech of Jeeyar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X