குறுக்குசால் ஓட்ட நினைப்பவர்கள் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது - ஜெயக்குமார் பொளேர்
ஆட்சியை கலைக்க நினைத்து குறுக்குசால் ஓட்ட நினைப்பவர்கள் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
டெல்லி: கண் பார்வையற்றோர் பள்ளியில் 3 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக டெல்லியில் பிரிட்டன் நாட்டவர் முர்ரே என்பவர் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் ஆர்கே புரம் பகுதியில் உள்ளது பார்வையற்றோருக்கான தேசிய பள்ளி. இங்கு கடந்த 8 முதல் 9 ஆண்டுகளாக பிரிட்டனை சேர்ந்த முர்ரே என்பவர் நன்கொடை அளித்து வருகிறார்.
54 வயதாகும் முர்ரே பிரிட்டனில் இருந்து டெல்லியில் உள்ள குருகிராமில் உள்ள நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் முதல் பணியாற்றி வருகிறார். இதனால் அவர் அடிக்கடி அந்த பள்ளிக்கு வந்து குழந்தைகளுடன் நேரம் செலவிட்டார்.
கடந்த 2-ஆம் தேதி பார்வையற்ற 3 குழந்தைகளை முர்ரே பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த தகவல் ஆர்கே புரம் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீஸார் முர்ரேவை கைது செய்தனர். அவரது லேப்டாப்பில் சோதனை செய்தபோது ஆட்சேபத்துக்குரிய படங்கள் இருந்தது தெரியவந்தது. அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
எம்எல்ஏக்கள் கூட்டம்
ஆளுநர் வித்யாசாகர் ராவ், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரிடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் நேரில் சென்று வலியுறுத்தினர். இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு
இக்கூட்டத்தில் சட்டசபை குழு தலைவராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே தொடர வேண்டும் என திண்டுக்கல் சீனிவாசன் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதாவது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தொடர ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
ஜெயக்குமார் பேட்டி
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இந்த கூட்டத்தில் 111 எம்.எல்.ஏக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக கூறினார். பேராவூரணி எம்.எல்.ஏ கோவிந்தராஜ் உடல்நலக் குறைவால் கலந்து கொள்ளவில்லை. கூட்டணி கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்களும் முதல்வர் எடப்பாடியை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.
சுதந்திரமாக செயல்பட விடுங்கள்
அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் புதுச்சேரி விடுதியில் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை சுயமாக செயல்படவிடாமல் அடைத்து, வைப்பதை ஏற்க முடியாது. சுதந்திரமாக செயல் பட அவர்களை அனுமதிக்க வேண்டும்.
போன் மூலம் ஆதரவு
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 9 பேரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. இதன்மூலம் ஆட்சியை கலைக்க நினைத்து குறுக்கு சால் ஓட்ட நினைத்தவர்களின் நினைப்பில் மண் விழுந்துள்ளது.
பெரும்பான்மை ஆதரவு
12ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட உள்ளதால் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கிறோம். இதில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.