ஆளுநருடன் ஜெயக்குமார், தம்பிதுரை திடீர் சந்திப்பு.. என்ன நடக்கப் போகிறது?
பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை அமைச்சர் ஜெயகுமார், லோக்சபா துணைத் தலைவர் தம்பிதுரை ஆகியோர் சந்தித்து பேசினர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார், லோக்சபா துணைத் தலைவர் தம்பிதுரை ஆகியோர் இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யசாகார ராவை திடீரென சந்தித்துப் பேசியுள்ளனர்.
அதிமுக இரண்டும் இணையப் போகின்றன. இதுதொடர்பாக பேச்சுக்கள் நடக்கவுள்ளன. இந்த நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டிய சூழலும் உள்ளது.

மறுபக்கம் தினகரன் கைதாகும் நிலையில் உள்ளார். அமைச்சர்கள் சிலரின் வீடுகள் வருமான வரி சோதனைக்குள்ளாகியுள்ளன. இந்தப் பின்னணியில் தமிழகம் வந்துள்ளார் பொறுப்பு ஆளுநர். அவரை இன்று ஜெயக்குமாரும், தம்பிதுரையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அதிமுக இணையவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications