Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேகமெடுக்கும் இன்ப்ளூயன்ஸா ப்ளூ காய்ச்சல்.. தமிழகத்தில் மீண்டும் லாக்டவுனா? அமைச்சர் பதில்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

கோடை காலம், குளிர்காலம், மழைக்காலங்களில் பொதுவாக சீதோஷ்ண மாற்றத்தினால் வைரஸ் காய்ச்சல்கள் பரவும். இது ஓரிரு நாட்களில் வந்துவிடும் பிறகு குணமாகிவிடும். ஆனால் தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில் எச்3என்2 என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது.

நாடு முழுவதும் இந்த புதிய காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் இடைவிடாத இருமல், தொண்டை வலி, உடல் வலிகளால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த காய்ச்சலின் அறிகுறிகள் குறித்து மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 வைரஸ் காய்ச்சல்

வைரஸ் காய்ச்சல்

இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்தும் தகவல்கள் வெளியானது. தமிழகத்திலும் இந்த வைரஸ் காய்ச்சல் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் சிறுவர்களையும் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்களையும் எளிதாக தொற்றுகிறது. இந்த காய்ச்சல் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.

 காய்ச்சல் தாக்கம்

காய்ச்சல் தாக்கம்

மருத்துவ ரீதியாக இந்த காய்ச்சலின் தாக்கத்தை பொருத்து 3 வகையாக பிரித்துள்ளார்கள். ஏ டைப் லேசான காய்ச்சல், பி டைப் மிதமான காய்ச்சல், சி டைப் தீவிரமான காய்ச்சல். இதில் சி டைப் காய்ச்சல் வயதானவர்களிடம் தான் காணப்படுகிறது. இவர்களுக்கு சுவாச பிரச்சினையும் ஏற்படுத்துவதால் கட்டாயம் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படும்.

உடல் வலி

உடல் வலி

சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் இருமல், உடல் வலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் வரை சிரமப்பட வைப்பதால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாதிப்பு இருப்பவர்களை கண்டறிந்து உரிய சிகிச்சைகள் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

மருந்து மாத்திரைகள்

மருந்து மாத்திரைகள்

தேவையான அளவிற்கு மருந்து, மாத்திரைகள் கையிருப்பு உள்ளன. அதனால் பதட்டம் கொள்ள தேவையில்லை. காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, உடல்வலி உள்ளவர்கள் 3, 4 நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டால் குணமாகும். இந்த பாதிப்புடன் வெளியே வந்தால் இருமல் வரும்போதும், தும்மல் வரும்போதும் அதில் இருந்து வெளியே வரும் நீர்துவாளைகள் மூலம் மற்றவர்களுக்கு பரவக் கூடும். அதனால் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

 காய்ச்சல்

காய்ச்சல்

இந்த நிலையில் காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. கள்ளக்குறிச்சியில் சிறுவங்கூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சேவையை அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மீண்டும் ஊரடங்கா

மீண்டும் ஊரடங்கா

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில் தமிழகத்தில் காலியாக உள்ள அரசு மருத்துவ பணியிடஙகளுக்கு விரைவில் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறினார். மேலும் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் அளவுக்கு காய்ச்சல் பரவவில்லை என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+