டெங்குவைக் கட்டுப்படுத்த அரசு சுனாமி வேகத்துல செயல்படுது - அமைச்சர் செல்லூர் ராஜூ- வீடியோ
டெங்குவைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு சுனாமியை போல வேகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை: டெங்குவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சுனாமி வேகத்தில் செயல்பட்டுக்கொண்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரையில் நேற்று விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழகத்தில் அதிமுகவை ஆட்சியில் அமர்த்தியதில் சசிகலாவின் பங்கு பெரிது.

ஆனால், ஜெயலலிதாவின் பிள்ளையாக நான் என் சுய விருப்பு வெறுப்புகளை அடக்கிக்கொண்டுள்ளேன். நான் கூறும் கருத்துக்கள் முதல்வரும் ஈபிஎஸுக்கும் துணை முதல்வரும் ஓபிஎஸ்ஸுக்கும் பாதகமாக அமைந்துவிடக் கூடாது.
எங்களுடையே ஒரே எதிரி திமுக. கருணாநிதி வழியில் மு.க.ஸ்டாலின் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர் எங்கள் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் சொல்வதுதான் அமைச்சராக என் கடமை.
டெங்குவை ஒழிப்பதில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது செவிலியர்களையும் மஸ்தூர்களையும் பணிக்கு எடுப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்திக்கொண்டுள்ளது.
மேலும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், செயலாளரும் 24 மணிநேரமும் செயல்பட்டுக்கொண்டு உள்ளார்கள். டெங்குக் காய்ய்ச்சல் பரவும் வேகத்தைவிட, அரசு சுனாமி வேகத்தில் செயல்பட்டு டெங்குக் காய்ய்ச்சலை கட்டுப்படுத்தி வருகிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.












Click it and Unblock the Notifications