For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதய கோளாறு: அமைச்சர் செந்தூர் பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் இதயக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் திங்கட்கிழமை தலைமைச் செயலகத்திற்கு வந்தார். மாலையில் அங்கிருந்து கிளம்பிய அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Minister Senthur Pandian hospitalised

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு இதய ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதாக தெரிவித்தனர். மேலும் அவரை உடனே உள்நோயாளியாக அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து செந்தூர் பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த செய்தி அறிந்த முதல்வர் பன்னீர் செல்வம் மருத்துவமனைக்கு சென்று செந்தூர் பாண்டியனை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். செந்தூர் பாண்டியனுக்கு இன்று ரத்தக் குழாய் அடைப்பை போக்க ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தொகுதியைச் சேர்ந்தவர் செந்தூர் பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Minister Senthur Pandian has been admitted in Malar hospital in Adyar after he complained of chest pain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X