பற்றி எரிந்த சென்னை சில்க்ஸ் கட்டடத்தை என்ன செய்யலாம்.. கமிஷனருடன் அமைச்சர் அவசர ஆலோசனை
இரண்டு நாட்களாக பற்றி எரிந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்தை அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்று வருகிறது.
சென்னை: இரண்டு நாட்களாக சென்னை சில்க்ஸ் கட்டடம் கொழுந்துவிட்டு எரிந்தது. இது தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் அமைச்சர் உதயகுமார் தலைமையில் சென்னை கமிஷனர் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்று வருகிறது.
தியாகராயர் நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்க 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் போராடி அணைத்தனர்.
இந்நிலையில், தீ கட்டுக்குள் வந்துள்ளதாகவும் தீ கங்குகளை முற்றிலுமாக அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இடிப்பு
தீ முற்றிலும் அணைந்த பின்னர், இந்தக் கட்டடத்தை அரசே இடித்துத் தள்ளும். பக்கத்து கடைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் கட்டடம் இடிக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

ஆய்வுக்குழு
கட்டடம் இடிக்கும் போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஐஐடியின் தொழில் நுட்ப வல்லுநுர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வை முடித்த பின்னர், எந்த விதத்தில் கட்டடத்தை இடிப்பது என்று முடிவெடுக்கப்பட உள்ளது.

அவசர ஆலோசனை
இந்நிலையில், சென்னை கமிஷனர் விஷ்வநாதனுடன் அமைச்சர் உதயகுமார் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். அவர்களுடன் அரசு அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அடுத்த நடவடிக்கை என்ன?
தி. நகர் பகுதியின் பாதுகாப்பு, போக்குவரத்து, கட்டட இடிப்பின் போது கொடுக்க வேண்டிய பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications