இன்னும் ஒரு மாதத்தில் 1044 மருத்துவர்கள் நியமனம்... அமைச்சர் விஜயபாஸ்கர்
இன்னும் ஒரு மாதக் காலத்துக்குள் 1044 மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள காலி பணியிடங்கள் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி எம்பிபிஎஸ், எம்டிஎஸ் போன்ற முதுநிலை சிறப்பு மருத்துவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெறுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவர்களில் 1044 பேருக்கு பணிஆணைகள் வழங்கப்பட்டு அவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications