அமைச்சர்கள் "பிசியோ பிசி".. ஜெயலலிதா பேஸ்புக்கில் படம் காட்டும் அரசு!
சென்னை: ஜெயலலிதா சிறையில் இருக்கிறார். ஆனால் அவரு பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில் ஸ்டேட்டஸ் மட்டும் தவறாமல் வெளியாகிறது. அதிலும் அமைச்சர்கள் சுறுசுறுப்பாக பணிகளில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்களைத் தொகுத்து லேட்டஸ்டாக ஒரு ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர்.
இதில் பல்வேறு துறை அமைச்சர்கள் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபடுவது போல காட்சிகள் உள்ளன.
அமைச்சர்கள் செயல்படுவதில்லை, சிறைக்குப் போவதே வேலையாக வைத்துள்ளனர். அரசு ஸ்தம்பித்துப் போயுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவதற்குப் பதில் அளிக்கும் வகையில் இந்தப் படங்களைப் போட்டுள்ளதாக தெரிகிறது.

கோகுல இந்திரா
ஒரு படத்தில் கைத்தறித்துறை அமைச்சர் கோகுல இந்திரா தனது அலுவலகத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது போன்ற ஒரு படம் உள்ளது.

அண்ணா படத்தை மறைத்த ஜெயலலிதா
இதில் கோகுல இந்திரா டேபிளில் வைத்துள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் படங்களில், அண்ணா படத்தை மறைத்தபடி ஜெயலலிதாவின் ஒரு போட்டோவை வைத்துள்ளார் கோகுல இந்திரா.

ப. மோகன்
ஊரகத் தொழில்துறை அமைச்சர் ப. மோகன் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்வது போல இன்னொரு படம் உள்ளது.

செல்லூர் ராஜு
இன்னொரு படத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அதிகாரிகளுடன் ஆலோசனையில் இடம் பெற்றிருக்கும் காட்சி உள்ளது.

பா. வளர்மதி
சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, தனது அலுவலகத்தில், அதிகாரிகள் மற்றும் சத்துணவுப் பணியாளர், அங்கன்வாடிப் பணியாளர்களுடன் இருப்பது போன்ற காட்சி உள்ளது.












Click it and Unblock the Notifications