சுப்பிரமணியனுக்கு ஆதரவு பெருகுகிறதாமே ஸ்ரீரங்கத்தில்... தமிழிசை சொல்கிறார்!
சென்னை: ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள் அங்குள்ள அரசு அதிகாரிகளை மிரட்டுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை 13 லட்சம் பேர் கட்சியில் சேர்ந்துள்ளனர். அடுத்த 2 மாதங்களில் 60 லட்சம் பேரை கட்சியில் சேர்க்க உள்ளோம்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் சுப்பிரமணியனுக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஸ்ரீரங்கத்தில் இருப்பது மும்முனை போட்டியே. அதிமுக, திமுகவுக்கு மாற்றுக் கட்சி என்பதை வைத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு வாக்கு சேகரித்து வருகிறோம். ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக பாஜக பொதுச் செயலாளர் நரேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நான் இன்று, நாளை என இரண்டு நாட்கள் ஸ்ரீரங்கத்தில் வாக்கு சேகரிக்கிறேன். மேலும் மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் ஸ்ரீரங்கத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வராக இருக்க முடியாது என்பதால் தான் ஸ்ரீரங்கத்தில் தேர்தல் நடக்க உள்ளது. மீண்டும் ஊழல் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில் மக்கள் கவனமாக உள்ளனர். ஸ்ரீரங்கத்தில் 27 அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் துறை வாரியாக அரசு அதிகாரிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்களிடம் கட்டாய வசூலும் நடந்து வருகிறது. இது குறித்து பல புகார்கள் எழுந்துள்ளன என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications