"எம்.ஜி.ஆர். 100".. சிறையில் வாடும் முஸ்லிம்களை விடுதலை செய்ய ஓ.பி.எஸ்.சுக்கு கடிதம்
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழக அரசு கொண்டாடுவதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து சிறையில் நீண்ட காலமாக சிறையில் உள்ள முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு தமிழ்நாடு
சென்னை: எந்த வித வழக்கோ, வழக்கு விசாரணையோ இல்லாமல் நீண்ட காலமாக சிறையில் முஸ்லிம்கள் தண்டனை பெற்று வருகின்றனர். இவர்களை எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது:

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாட உள்ளது. இதனையொட்டி பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தமிழக அரசு அறிவிக்க உள்ளதாக செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் தண்டனை பெற்று நீண்ட காலமாக தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய உள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. தமிழக அரசு அத்தகைய நல்லெண்ண அடிப்படையிலான முடிவை எடுத்தால் அதனை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் வரவேற்கிறோம்.
தமிழ்நாடு அரசு சார்பில் அத்தகைய அறிவிப்பை வெளியிடும் போது பல்லாண்டு காலமாக தண்டனை பெற்று சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்த சிறைக் கைதிகளையும், வழக்கோ விசாரணையோ இல்லாமல் பல்லாண்டு காலமாக தமிழக சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் முஸ்லீம்களின் வழக்குகளை மறுபரிசீலனை செய்து அவர்களையும் சிறைகளில் இருந்து விடுதலை செய்யுமாறும், அவர்களது பிரிவால் மிகவும் துன்ப துயரத்தில் வாழும் இஸ்லாமியக் குடும்பங்களின் துயரத்தைக் களைய நடவடிக்கை எடுக்கும்படியும் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications