வெயிட்டிங் பார் 'டைமிங்'... 'திரும்பவும் வந்துட்டேன்னு' சொல்வார்...போட்டு தாக்கும் அழகிரி கோஷ்டி
தீவிர அரசியலுக்கு முக அழகிரி திரும்பவும் வருவார்..அப்போதுதான் அவரது வலிமை தெரியவரும் என ஆதரவாளர்கள் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அரசியலை விட்டு முக அழகிரி ஒதுங்கவில்லை... திரும்பவும் வந்துட்டேன்னு அவர் சொல்கிற காலம் நிச்சயம் வரும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
திமுகவில் தலைமை பதவிக்கான அதிகாரப் போட்டியில் ஸ்டாலினும் அழகிரியும் முட்டி மோதினர். இதில் மூத்தவரான மு.க. அழகிரி, கட்சியில் இருந்து நீக்கப்படும் நிலை உருவானது.

நோ கமெண்ட்ஸ்
இதற்கு பின்னர் அரசியலைப் பற்றி எந்த ஒரு கருத்துமே தெரிவிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தந்தை கருணாநிதியையும் அவரது தாயார் தயாளு அம்மாளையும் மட்டும் கோபாலபுரம் இல்லத்தில் அவ்வப்போது சந்தித்து விட்டு அமைதியாக செல்கிறார் அழகிரி.

காலம் வரும்
அழகிரியின் நடவடிக்கைகள் தொடர்பாக அவரது ஆதரவு கோஷ்டியிடம் கேட்டபோது, நாங்க எல்லாவற்றையும் பார்த்துகிட்டேதான் இருக்கோம்.. எங்களுக்கும் ஒரு காலம் வரும்... நிச்சயம் வரும்.. அப்ப நாங்க யாருன்னு காட்டுவோம் என்கின்றனர்.

தொந்தரவு செய்யக் கூடாது...
அழகிரியைப் பொறுத்தவரையில் கருணாநிதி உடல்நலம் இல்லாமல் ஓய்வெடுத்து வரும் நிலையில் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைக்கிறார். அதனாலேயே எந்த ஒரு கருத்தையும் அழகிரி தெரிவிக்காமல் இருந்து வருகிறார் என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.

வைரவிழா
அதேபோல் கருணாநிதியின் வைரவிழா என்பது அரசியல் ரீதியாக திமுக நடத்தக் கூடிய நிகழ்ச்சி. நிச்சயம் எங்களை அழைக்கவும் மாட்டார்கள்...அந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் போகவும் மாட்டோம்.. போய் அவமானப்படுவதற்கு அமைதியாக இருப்போம் எனவும் கோட்டிட்டு காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications