ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளரை மநகூ ஆதரிக்க மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரிக்க மக்கள் நலக் கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளரை மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்று என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெயர் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். ஜனநாயகத்தில் உள்ள நம்பிக்கை உள்ள அனைவரும் திமுகவை ஆதரிக்க வேண்டும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஏற்கனவே பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
அப்படி ஆதரவு தெரிவித்தால் அதை திமுக வரவேற்கும். சட்டசபையில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தலைமையிலான போலீசார்தான் எங்களை தாக்கி வெளியேற்றினர்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications