தமிழக மக்களின் நீர் தேவையை கருத்தில் கொண்டு கேரளாவுக்கு நீர் திறக்கக் கூடாது- ஸ்டாலின் கோரிக்கை

தமிழக மக்களின் நீர் தேவையை கருத்தில் கொண்டு கேரளாவுக்கு நீர் திறக்க கூடாது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கேரளாவின் மிரட்டலுக்கு அடிபணிந்தது தமிழகம்- வீடியோ

    சென்னை: தமிழக மக்களின் நீர் தேவையை கருத்தில் கொண்டு கேரளாவுக்கு நீர் திறக்க கூடாது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

    கேரள அரசின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஆழியாறு அணையிலும் போதிய நீர் இல்லை. அப்படியிருக்கும்போது கேரளாவுக்கு தண்ணீர் கொடுப்பதாக இங்கு கடும் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது.

    MK Stalin demands to not to open water for Kerala

    தமிழக மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்துவிட்டு பின்னர் கேரள அரசுக்கு தண்ணீர் திறந்துவிட்டிருக்கலாம் என்று விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் கோவை, திருப்பூர் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    இதை தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களும் கண்டித்த வண்ணம் உள்ளனர். கேரளாவுக்கு நீர் திறந்து விடக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில் பரம்பிகுளம்- ஆழியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு நீர் திறப்பதை நிறுத்த வேண்டும். கோவை, திருப்பூர் மகக்களின் நீர் தேவையை கருத்தில் கொண்டு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கேரள பாசன தேவைக்கு மாற்று வசதிகள் இருக்கும் ஆழியாறு நீரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+