திமுக தலைவரானதும் ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார் ஸ்டாலின்
Recommended Video
சென்னை: திமுக தலைவராக பதவியேற்றவுடன் ராஜாத்தி அம்மாளிடம் மு. க. ஸ்டாலின் ஆசி பெற்றார்.
கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார். இதையடுத்து திமுக தலைவர் பதவி காலியானது.
அந்த பதவிக்கு ஸ்டாலினை அமர்த்துவது என கட்சியின் மூத்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி 28-ஆம் தேதி உள்கட்சி தேர்தல் நடத்துவதாக இருந்தது. இந்நிலையில் தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கான அறிவிப்பு நேற்று நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் வழங்கப்பட்டது. ஸ்டாலினின் கன்னத்தை வருடி தனது முதல் வாழ்த்தை பதிவு செய்தார் க.அன்பழகன். இதையடுத்து அவர் அண்ணா, கருணாநிதி, பெரியார் ஆகியோர் சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து கோபாலபுரத்தில் தாய் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார் . இந்நிலையில் சிஐடி காலனியில் உள்ள கனிமொழி வீட்டுக்கு சென்றார்.
அங்கு ராஜாத்தி அம்மாளை வணங்கி ஆசி பெற்றார். உடன் கனிமொழி இருந்தார்.