எங்கே இருக்கிறீர்கள்... போயஸ் கார்டனா? சிறுதாவூரா? கொடநாடா? ஜெ.வுக்கு ஸ்டாலின் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடாமல் முதல்வர் ஜெயலலிதா, போயஸ் கார்டனில் இருக்கிறாரா? சிறுதாவூர் பங்களாவில் இருக்கிறாரா? கொடநாடு எஸ்டேட்டில் இருக்கிறாரா? எங்கே இருக்கிறார் என தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெள்ள நிவாரணப் பொருட்களை அ.தி.மு.க.வினர் பறித்துக் கொண்டு ஜெ. படத்தை வம்படியாக ஒட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின் கூறியதாவது:

MK Stalin slams Jayalalithaa

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா நேரில் பார்வையிடவில்லை. அவர் இப்போது போயஸ் கார்டனில் இருக்கிறாரா? சிறுதாவூரில் இருக்கிறாரா? அல்லது கொடநாட்டுக்கு ஓய்வெடுக்கப் போய்விட்டாரா?

இப்போது அவரது படம் மட்டும் தனியார் கொடுக்கும் நிவாரணப் பொருட்கள் மீது ஒட்டப்பட வேண்டுமா? ஏன் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கவில்லை?

சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இந்த பாதிப்பை குறைப்பதற்கு உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை. அவர்கள் கொடுத்த எந்த எண்களுமே வேலை செய்யவில்லை. ஆகையால் கமிஷனரை அழைத்து பேசினேன். ஆனால் ஒரு பிரயோஜனும் இல்லை.

நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. இதை தெளிவாக எங்கள் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மொத்தம் 450 பேர் வரை பருவமழைக்கு பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+