அரசியல்வாதிகள் ஸ்டைலில் மதுரை பல்கலை. துணைவேந்தருக்கு போஸ்டர் ஒட்டிய "விசுவாசிகள்"!
மதுரை: அரசியல்வாதிகளே தோற்றுப் போய் விடுவார்கள் போல.. அப்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் விசுவாசிகள், முதல்வர் ஜெயலலிதா படத்தைப் போட்டு, பிரமாண்ட அம்மா எழுத்துடன், துணைவேந்தர் பணியில் கல்யாணி தொடர அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி கூறியுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகேயும், பிற இடங்களிலும் இந்த போஸ்டர்கள் பிரமாண்டமாக பளிச்சிட்டதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
பலருக்கோ, ஒருவேளை கல்யாணி மதிவாணன் அதிமுகவில் சேர்ந்து விட்டாரோ என்று சந்தேகம் வரும அளவுக்கு அந்த போஸ்டர்கள் கலர்ஃபுல்லாக இருந்தன.

துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணனை நியமித்து 9.4.2012 அன்று தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டார். அதன்படி, கல்யாணி மதிவாணன் துணைவேந்தராக பதவியேற்றுக்கொண்டார். பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக பதவி வகிக்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

இணைப் பேராசிரியை மட்டும்தான்
கல்யாணி மதிவாணன் இணை பேராசிரியையாக மட்டுமே பணியாற்றி உள்ளார். பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் கல்யாணி மதிவாணனை துணைவேந்தராக நியமித்தது சரியல்ல. எனவே, அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டது.

மதுரை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, கல்யாணி மதிவாணன் பதவி நியமனம் செல்லாது என்றும், அவரது நியமனம் ரத்து செய்யப்படுகிறது என்றும் கடந்த ஜூன் 26-ந் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து கல்யாணி உச்சநீதிமன்றத்தில் அப்பீல்.

உச்சநீதிமன்றம் அனுமதி
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. கல்யாணிக்காக, பிரபல மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகியிருந்தார்.

பிரமாண்டக் கொண்டாட்டம்
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுக பிரமுகருக்கு அடிக்கப்படும் போஸ்டர் போலவே அது உள்ளது.

"அம்மா" படத்துடன்
முதல்வர் ஜெயலலிதாவின் பெரிய புகைப்படத்துடன், கீழே கல்யாணி மதிவாணன் படத்தையும் போட்டு போஸ்டர் அடித்துள்ளனர்.

கல்வித்தாய் ஜெயலலிதா
கல்வித்தாய் ஜெயலலிதா ஆட்சியில் கண்ணியமிகு துணைவேந்தர் பதவியில் தொடர அனுமதித்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி. இப்படிக்கு உண்மை விசுவாசிகள் என்று அதில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த போஸ்டர்கள்தான் இப்போதைக்கு மதுரையின் "ஹாட்" விஷயமாக மாறியுள்ளது!
-
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications