தமிழக லாரி டிரைவரை அரை நிர்வாணப்படுத்தி அநாகரீகமாக நடந்த வன்முறையாளர்கள்!
பெங்களூரு: கர்நாடகத்தில் நடந்து வரும் காவிரிப் போராட்டத்தில், தமிழர்களைஏதோ வெளிநாட்டு எதிரிகளைப் போல பாவித்து படு மோசமாக நடத்தியுள்ளனர் வன்முறையாளர்கள் என்பது படிப்படியாக அம்பலமாகி வருகிறது. இதுதொடர்பாக வெளியாகி வரும் வீடியோ காட்சிகள் மனதை பதை பதைக்க வைப்பதாக உள்ளது.
இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இதுபோல பக்கத்து மாநிலத்துக்காரர்களை அநாகரீகமாக நடத்துவார்களா என்பது சந்தேகம்தான். பாகிஸ்தானில் கூட இந்தியர்களை இந்த அளவுக்கு கொடுமைப்படுத்த மாட்டார்கள். அந்த அளவுக்கு படு கேவலமாக நடந்துள்ளனர் போராட்டக்காரர்கள்.
வயதா முதியவரை கன்னத்தில் அடித்து கீழே விழ வைத்து அசிங்கப்படுத்திய வீடியோவைப் போல இன்னொரு வீடியோவை நியூஸ் 7 வெளியிட்டுள்ளது. அதிலும் ஒரு லாரி டிரைவரை அடித்து ஆடைகளைக் களைந்து ஜட்டியுடன் நடு ரோட்டில் முட்டி போட வைத்து அதைப் பார்த்து குதூகலிக்கிறது ஒரு கூட்டம்.
இந்த அநாகரீகமான செயலில் ஈடுபட்டது கன்னட ரக்ஷன வேதிகே என்ற கன்னட அமைப்பாகும்.
என்ன மாதிரியான வன்மம் இது?