தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வரும் மோடி, அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் தமிழகத்திற்கு பிரச்சாரம் செய்ய வருகிறார்கள்.
தமிழக பாஜக மாநில தேர்தல் நிர்வாக குழு கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான முரளிதர் ராவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சி தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், அமைப்பின் பொதுச் செயலாளர் மோகன் ராஜுலு, பொது செயலாளர் வானதி சீனிவாசன் மற்று தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்.
கூட்டம் முடிந்த பிறகு ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யும் வகையில் கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றிலும் இருந்து ஒருவர் வீதம் குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரச்சாரத்தின்போது தமிழகத்தின் வளர்ச்சி, எதிர்பார்ப்பு, மீனவர் பிரச்சனை ஆகியவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்யவிருக்கின்றனர். அவர்கள் வரும் தேதி, பொதுக்கூட்டங்கள் நடக்கும் இடங்கள் ஆகியவை குறித்து இன்னும் 2 அல்லது 3 நாட்களில் ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்யும்.
தமிழகத்தில் 100க்கும் குறைவான பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள இந்த கூட்டணி மத்தியில் ஆட்சி அமைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications