பிரசாரத்துக்கு மோடி, அகில பாரத தலைவர்கள் வருகிறார்கள்: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: தேர்தல் பிரசாரத்துக்காக அடுத்த மாதம் பிரதமர் மோடி மற்றும் அகில பாரத தலைவர்கள் தமிழகம் வருகை தர உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிகத்தில் பாஜக வலுவான கட்சியாக மாறி வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்தது போக மற்ற தொகுதிகளில் பாஜக வலிமையுடன் போட்டியிடும்.

பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக மேலிடத் தலைவர்கள் அடுத்த மாதம் தமிழகம் வருகிறார்கள். 20க்கும் மேற்பட்ட அகில பாரத தலைவர்கள் தமிழகத்துக்கு வருகை தர உள்ளனர்.
படிப்படியாக மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பு ஏற்க முடியாது. கச்சத்தீவு, சேது சமுத்திர திட்டம் குறித்த தி.மு.க.வின் அறிவிப்பையும் மக்கள் ஏற்கமாட்டார்கள்.
தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பாஜகவின் தேர்தல் அறிக்கை தொலை நோக்கு பார்வையுடன் தயாரிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.












Click it and Unblock the Notifications