ராஜபக்சேவை அழைப்பதை மோடி தவிர்த்திருக்கலாம்: 'அடக்கமாக' கருத்து சொல்லும் திமுக!
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளதாவது:
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உலக நாடுகள் அனைத்துமே கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழக மக்கள் ராஜபக்சே மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
தமிழக மக்களின் உணர்வுகளை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும். ராஜபக்சேவை அழைப்பதை அவர் தவிர்த்திருக்கலாம். ஏனெனில் மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
அதே நேரத்தில் ராஜபக்சே பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டால் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள்.
இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications