ராஜபக்சேவை அழைப்பதை மோடி தவிர்த்திருக்கலாம்: 'அடக்கமாக' கருத்து சொல்லும் திமுக!

Subscribe to Oneindia Tamil

Modi could have avoind Rajapaksa: DMK
சென்னை: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை தமது பதவியேற்பு விழாவுக்கு அழைப்பதை பிரதமர் நரேந்திர மோடி தவிர்த்திருக்கலாம் என்று திமுக ரொம்பவே "அடக்கமாக" கருத்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளதாவது:

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உலக நாடுகள் அனைத்துமே கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழக மக்கள் ராஜபக்சே மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

தமிழக மக்களின் உணர்வுகளை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும். ராஜபக்சேவை அழைப்பதை அவர் தவிர்த்திருக்கலாம். ஏனெனில் மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

அதே நேரத்தில் ராஜபக்சே பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டால் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள்.

இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+