வாங்க நண்பரே சிறிசேனா.. தமிழில் வாழ்த்தி வரவேற்று மகிழ்ந்த மோடி!
சென்னை: கோவா பிரிக்ஸ் மாநாட்டுக்கு வந்த இலங்கை அதிபர் சிறிசேனாவை வரவேற்று தமிழில் டிவீட் வெளியிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டுக்கு அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், பூட்டான் ஆகியவற்றுக்கும் இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்று அதன் தலைவர்கள் வந்துள்ளனர். இலங்கை அதிபர் சிறிசேனாவும் வந்திருந்தார்.
ஒருநண்பரின்வருகை...பிரிக்ஸ்-பிம்ஸ்டெக்மாநாட்டிற்காக இலங்கையின் ஜனாதிபதி @MaithripalaS இந்தியாவிற்குவருகைபுரிவதில்மிகுந்தமகிழ்ச்சி.
— Narendra Modi (@narendramodi) October 15, 2016
இந்த நிலையில் சிறிசேனாவின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்து தமிழில் டிவீட் போட்டுள்ளார் மோடி. இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், ஒரு நண்பரின் வருகை... பிரிக்ஸ்-பிம்ஸ்டெக் மாநாட்டிற்காக இலங்கையின் ஜனாதிபதி @MaithripalaS இந்தியாவிற்கு வருகை புரிவதில் மிகுந்த மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார் மோடி.
මිත්රයෙකුගේ පැමිණීම...BRICS-BIMSTEC සමුළුවට සහභාගී වීම සඳහා ඉන්දියාවට සපැමිණි ශ්රී ලංකා ජනාධිපති @MaithripalaS සාදරයෙන් පිළිගන්නෙමි.
— Narendra Modi (@narendramodi) October 15, 2016
ஒவ்வொரு நாட்டுத் தலைவரையும் அவரவர் நாட்டு பாஷையில் வரவேற்பது மோடி ஸ்டைல். அந்த வகையில் சிறிசேனாவை அவர் தமிழில் வரவேற்றுள்ளார். அதேசமயம், சிங்களத்திலும் சிறிசேனாவை அவர் வரவேற்று டிவீட் போட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications