போன் செய்து ஜெயலலிதாவை வாழ்த்திய மோடி!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கின் அப்பீல் வழக்கில் வென்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்தியதாக ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் செய்தி கூறப்பட்டது.
அப்பீல் வழக்கில் இன்று ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் நிரபராதிகள் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயலலிதாவும் தீர்ப்பை வரவேற்று அறிக்கை விடுத்துள்ளார். அவருக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெயா பிளஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஒரு செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக கூறப்பட்டது.
அதேபோல மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நஜ்மா ஹெப்துல்லா, தமிழக ஆளுநர் ரோசய்யா ஆகியோரும் ஜெயலலிதாவை வாழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications