திரையில்தான் சூப்பர் ஹீரோ.. சென்னை வெள்ளத்தில் சிக்கி 1 வாரம் வீட்டுக்குள் முடங்கினேன்: மோகன்லால்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரையில் சூப்பர் ஹிரோவாக நடித்த என்னால் 1 வாரம் வீட்டை விட்டே வெளியே போக முடியாமல் மழை முடக்கிப்போட்டது என்று இயற்கையின் சக்தி குறித்து நடிகர் மோகன்லால் விவரித்துள்ளார்.

சென்னையில் மழை, வெள்ளம் ஏற்பட்டபோது, இந்த நகரில்தான் மோகன்லால் இருந்துள்ளார். இங்கிருந்து பாங்காங்க் செல்ல கிளம்புவதற்கு தயாராகிக்கொண்டிருந்தபோது, வெள்ளம் இவரது வீட்டையும் சூழ்ந்துள்ளது.

இதனால் ஒரு வார காலம் வெளியே போக முடியாமல், வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளார் மோகன்லால்.

பலஹீனம்

பலஹீனம்

இதுகுறித்து தனது பிளாக்கில் அவர் கூறியுள்ளதாவது: நான் பல படங்களில் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளேன். ஆனால் ஒரு வெள்ளம் என்னை எவ்வளவு பலஹீனமானவன் என்பதை காட்டிவிட்டது.

ஒரு துளி போதும்

ஒரு துளி போதும்

ஒரு துளி மழையை கூட மனிதர்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்ற உண்மையை இயற்கை படம்பிடித்து காட்டிவிட்டது.

வேதனை, ஆறுதல்

வேதனை, ஆறுதல்

எனது ஃபேவரைட் சிட்டியான சென்னை, தற்போதுள்ள நிலைமையை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. அதேநேரம், மனிதர்கள் வேற்றுமையை மறந்து ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டது ஆறுதல் அளிக்கிறது.

மலையாளிகள் ஹெல்ப்

மலையாளிகள் ஹெல்ப்

மலையாள மக்களும், மலையாள ஊடகங்களும், சென்னை மக்களுக்கு பெரும் உதவி செய்துள்ளன. அவர்களுக்கு பாராட்டுகள். இவ்வாறு மோகன்லால் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+