கன்னியாகுமரி அருகே கள்ளக்காதலியின் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கயவன் மீது புகார்
கன்னியாகுமரி அருகே கள்ளக்காதலியின் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற நபர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே கள்ளக்காதலியின் 19 வயதை மகளை பலாத்காரம் செய்ய முயன்ற ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
சாமிதோப்பு செட்டிவிளையை சேர்ந்தவர் தர்மர் (36). கட்டட ஒப்பந்ததாரராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். இந்த நிலையில் இவருக்கு வடக்கு தாமரைகுளம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் பின்னர் கள்ளக்காதலாக மாறியது. கடந்த சில ஆண்டுகளாக தர்மர் கள்ளக்காதலியின் வீட்டிலேயே தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கள்ளக்காதலிக்கு 19 வயது மகள் உள்ளார்.

கணவன் -மனைவி போல்
நர்சிங் படித்துள்ள அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு சென்றுவந்தார். அந்த பெண் தன்னுடன் பணியாற்றும் அசாம் மாநில இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒரே வீட்டில் கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர்.

சந்திக்க விருப்பம்
இந்நிலையில் அந்த இளைஞருடன் அந்த பெண் பழகுவதை தர்மர் கண்டித்தார். எனினும் அதை பொருட்படுத்தாமல் அவருடன் அந்த பெண் தொடர்பில் இருந்தார். கடந்த 23-ஆம் தேதி அசாம் வாலிபரை சந்திக்க விரும்புவதாக கூறிய தர்மர் அந்த பெண்ணுடன் நிறுவனத்துக்கு சென்றார்.

தலைமறைவு
அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து தர்மர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து எப்படியோ தர்மரிடம் இருந்து தப்பி வந்த அந்த பெண், மகளிர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தர்மரை தேடி போலீஸார் சென்ற போது அவர் தலைமறைவாகிவிட்டார்.

காதலன் மாயம்
இதனிடையே அந்த பெண்ணை காதலித்த அசாம் இளைஞரும் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு இதனால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications