தமிழிசை பற்றி விமர்சனம்.. நாஞ்சில் சம்பத் மீது மேலும் 4 வழக்குகள் பதிவு! கைதுக்கு வாய்ப்பு?
சென்னை: அதிமுக அம்மா அணியின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மீது பாஜக சார்பில் மேலும் 4 போலீஸ் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் நாஞ்சில் சம்பத் மீதான புகார்கள் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை குறித்து நாஞ்சில் சம்பத் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து பட்டினப்பாக்கத்தில் உள்ள நாஞ்சில் சம்பத்தின் வீட்டை பாஜக நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட பாஜக தலைவர் லோகநாதன் அளித்த புகாரின் பேரில் நாஞ்சில் சம்பத் மீது பல்லாவரம், பம்மல், அம்பத்தூர் எஸ்டேட், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட 4 காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றும் சைதாப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி காவல் நிலையங்களில் பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டது. இதனையடுத்து நாஞ்சில் சம்பத் மீது பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
எனவே நாஞ்சில் சம்பத் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனிடையே, தமிழக அரசு பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக செயல்படுவதாக அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டிுள்ளார்.