முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது - கண்காணிப்பு குழு தலைவர் பேட்டி
குமுளி: முல்லைப் பெரியாறு அணை உறுதியாகவும், பலமாகவும் உள்ளதாக ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு குழு தலைவர் பி.ஆர்.கே. பிள்ளை தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்ற பிறப்பித்த உத்தரவின் பெயரில் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. மேலும் தண்ணீர் தேக்குவதை கண்காணிப்பதற்காக மூன்று பேர் கொண்ட கண்காணிப்பு குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமனம் செய்தது.

இந்த குழுவில் மத்திய அரசின் நீர்வளம் சார்பாக ஒரு அதிகாரியும், கேரளா அரசின் சார்பாக ஒரு பிரதிநிதியும், தமிழக அரசின் சார்பாக பிரதிநிதியும் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு முறையும் அணையின் நீர் மட்டம் உயரும் போதெல்லாம் இந்த குழு அணையை கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், முல்லை பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் பி.ஆர்.கே. பிள்ளை தலைமையில் மூவர் குழுவினர் இன்று ஆய்வில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரனும், கேரளாவின் சார்பில் கேரளா நீர் பாசன கூடுதல் செயலர் குரியன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர். புதிதாக பொறுப்பேற்ற இந்தக் குழுவினர் அணையை ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின் தேக்கடியில் அமைந்துள்ள மேற்பார்வையாளர் விடுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.கே. பிள்ளை, முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதால் எந்த வெள்ளத்தையும் தாங்கும் எனத் தெரிவித்தார்.
மேலும், 13 மதகுகளும் பழுதில்லாமல் உள்ளதாகவும், கேரள மக்களின் அச்சத்தை போக்குவதற்காகவே, இந்த முதல் கட்ட ஆய்வு நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.விரைவில் அணைக்கு மின்சாரம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மத்திய அரசின் உத்தரவுக்கு பிறகு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பி.ஆர்.கே. பிள்ளை தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications