முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது - கண்காணிப்பு குழு தலைவர் பேட்டி
குமுளி: முல்லைப் பெரியாறு அணை உறுதியாகவும், பலமாகவும் உள்ளதாக ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு குழு தலைவர் பி.ஆர்.கே. பிள்ளை தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்ற பிறப்பித்த உத்தரவின் பெயரில் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. மேலும் தண்ணீர் தேக்குவதை கண்காணிப்பதற்காக மூன்று பேர் கொண்ட கண்காணிப்பு குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமனம் செய்தது.

இந்த குழுவில் மத்திய அரசின் நீர்வளம் சார்பாக ஒரு அதிகாரியும், கேரளா அரசின் சார்பாக ஒரு பிரதிநிதியும், தமிழக அரசின் சார்பாக பிரதிநிதியும் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு முறையும் அணையின் நீர் மட்டம் உயரும் போதெல்லாம் இந்த குழு அணையை கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், முல்லை பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் பி.ஆர்.கே. பிள்ளை தலைமையில் மூவர் குழுவினர் இன்று ஆய்வில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரனும், கேரளாவின் சார்பில் கேரளா நீர் பாசன கூடுதல் செயலர் குரியன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர். புதிதாக பொறுப்பேற்ற இந்தக் குழுவினர் அணையை ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின் தேக்கடியில் அமைந்துள்ள மேற்பார்வையாளர் விடுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.கே. பிள்ளை, முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதால் எந்த வெள்ளத்தையும் தாங்கும் எனத் தெரிவித்தார்.
மேலும், 13 மதகுகளும் பழுதில்லாமல் உள்ளதாகவும், கேரள மக்களின் அச்சத்தை போக்குவதற்காகவே, இந்த முதல் கட்ட ஆய்வு நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.விரைவில் அணைக்கு மின்சாரம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மத்திய அரசின் உத்தரவுக்கு பிறகு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பி.ஆர்.கே. பிள்ளை தெரிவித்தார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications