ஓபிஎஸ்ஸை கத்தியால் குத்த முயற்சி... அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்: வீடியோ
திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை சோலைராஜன் என்பவர் கத்தியால் குத்த முயன்றதால் அங்கு பரபரப்பு உண்டானது.
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் முன்னள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கத்தியால் கொல்ல முயன்றவர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தடுத்து, போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.
சென்னையிலிருந்து விமனம் மூலம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சிக்கு சென்றுள்ளார். விமான நிலையத்திலிருந்து வெளியேறும்போது அவரை வரவேற்க ஆதரவாளர்கள் காத்திருந்தனர். அதில் ஒருவர் திடீரென வந்து, தன் இடுப்பில் சொருகிவைத்திருந்த கைத்தியை எடுத்து ஓபிஎஸ்ஸை குத்த முயற்சித்துள்ளார்.

இதனைப் பார்த்த அவரது ஆதரவாளர்கள் அவரை தடுத்து தாக்கியுள்ளனர். பிறகு, உடனே போலீஸிடம் புகார் கொடுத்தனர். அதனையடுத்து அங்கு வந்த போலீஸ் அவரைக் கைது செய்தனர். அவருடைய பெயர் சோலைராஜன் என்பது தெரிய வந்தது. இந்தக் கொலை முயற்சி அரசியல் காரணங்களுக்காகவா அல்லது சொந்தக் காரணங்களுக்காகவா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் தான் இந்த கொலை முயற்சி நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications