கொலைகளுக்கு சற்றும் பஞ்சமில்லாத தமிழகம்.. ஒரே நாளில் 3 கொலை!
சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வருகின்ற கொலைச் செயல்களால் அனைத்து தரப்பு மக்களிடையேயும் இனம்புரியாத அச்சம் நிலவி வருகின்றது. நேற்று ஒரே நாளில் 3 பேர் 3 ஊர்களில் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் ஆரல்வாய்மொழி அருகே அதிமுக ஊராட்சி மன்றத்தலைவியின் உறவினர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மாதவலாயத்தில் முன் விரோதம் காரணமாக நிகழ்ந்த இந்தக் கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்தவர் போலீசில் சரண் அடைந்தார்.

காஞ்சிபுரம் சோமங்களம் அருகே அமரமேட்டில் கல்லூரி மாணவர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். காதல் தகராறு காரணமாக மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா என்று கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கும்பகோணத்தில் வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மேல மருதக்குடியை சேர்ந்தவர் ராஜா.
சென்னை ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது அண்ணன் ஸ்டாலின் பா.ம.க மாநில துணைத் தலைவராக உள்ளார். இவரது குடும்பத்தினருக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், ராஜா விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
நேற்று இரவு பெருமாநல்லூர் என்ற இடத்தில் காளியாட்டம் திருவிழாவை காண காரில் சென்றார். அவருடன் பாலமுருகன் உள்பட 3 பேர் சென்றனர். அவர்கள் திருவிழா பார்த்துவிட்டு சன்னாபுரம் ரயில்வே கேட் அருகே வந்தனர். அப்போது எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா காரில் இருந்து கீழே இறங்கினார். அப்போது காரில் இருந்து முகமூடி அணிந்த 4 பேர் அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் ராஜாவை கொல்ல ஓடி வந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ராஜா ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை விரட்டி சரமாரியாக வெட்டியது.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கொலையை தடுக்க முயன்ற பாலமுருகனையும் முகமூடி கும்பல் தாக்கியது. இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் தப்பி சென்றுவிட்டது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications