அதிகாரத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் துஷ்பிரயோகம் செய்கிறார்: முத்தரசன் குற்றச்சாட்டு
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து வைத்துக் கொண்டு முதல்வராக துடித்துக் கொண்டிருக்கிறார் சசிகலா. அதே நேரத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இதுவரை அவருக்கு 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 5 எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பள்ளி கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, நகராட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் ஓ.பி.எஸ். அணிக்கு தாவ உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
இதனால் தம்மால் முதல்வராக முடியாதோ என பதற்றத்திலும் விரக்தியிலும் இருக்கிறார் சசிகலா. அத்துடன் நேற்று ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் சசிகலா. ஆனால் ஆளுநர் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை. இதனால் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளது மன்னார்குடி கோஷ்டி.
இந்நிலையில் அதிமுகவில் நடக்கும் அதிகார போட்டி பகிரங்கமாக தெரிந்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். மேலும், சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் காலம் தாழ்த்துவதன் மூலம் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார் என்றும். ஆளுநரை காலதாமதம் செய்யக்கோரி பின்னால் இருந்து ஏதோ ஒரு சக்தி நிர்பந்திக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications