விவசாயிகளின் போராட்டத்தை சாக்குபோக்கு கூறி முடிக்க மத்திய அரசு முயற்சி... முத்தரசன் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வறட்சி நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளின் போராட்டத்தை சாக்கு போக்கு கூறி முடிவுக்கு கொண்டு வரவே மத்திய அரசு முயற்சிக்கிறது என கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், நதி நீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாள்களாக டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Mutharasan condemns Central govt's stand on farmers issue

இந்நிலையில் ரூ.40,000 வறட்சி நிவாரணத்தை தமிழக அரசு கோரிய நிலையில் மத்திய அரசு வெறும் ரூ.1,748 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் நேற்று நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் விவசாயிகளை நேரில் சந்தித்து பேசினர்.

இந்நிலையில் இன்று நடிகர்கள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து பேசினர். இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்காத நிலையில் விரக்தி அடைந்த இரு விவசாயிகள் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவிக்கையில், வழக்கறிஞர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 13 நாள்களாக போராடி வருகின்றனர். அவர்கள் நினைத்து பார்க்க முடியாத பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தவறிவிட்டு சாக்கு போக்கு கூறி அவர்களின் போராட்டத்தை நிறுத்தவே மத்திய அரசு பார்க்கிறது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+