முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு: ஆவணங்கள் தாக்கல் செய்ய ஹைகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டிற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்று கூறியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும், முன்னாள் அமைச்சர் 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தியின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, வழக்கு தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்,' என, உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலியில் வேளாண்மை பொறியியல்துறை உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்தவர் முத்துக்குமாரசாமி. டிரைவர்கள் பணி நியமனத்திற்கு லஞ்சம் பெற்றுத்தருமாறு நெருக்கடி வந்ததால், கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி,20ம் தேதியன்று ரயில்முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அதே ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். அமைச்சர் பதவி, கட்சிப்பொறுப்பும் பறிக்கப்பட்டது. தற்கொலைக்கு துாண்டுதல், கூட்டுச் சதி, ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி, வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில் மீது சி.பி.சி.ஐ.டி.போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக, நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், 'தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், என் மீது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் தற்கொலைக்கு தூண்டியது ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முத்துக்குமாரசாமியிடம் நான் பணம் கேட்டதாக கூறுவதற்கு எந்த சாட்சியும் இல்லை.
தற்காலிக டிரைவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களிடம் பணம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று முத்துக்குமாரசாமியிடம் நான் கூறியதாக யாரோ சொன்னதாக யூகத்தின் அடிப்படையிலேயே என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை நீதிபதி வி.எஸ்.ரவி விசாரித்தார். அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சண்முகவேலாயுதம், மனுதாரர் வழக்கறிஞர் சண்முகராஜா சேதுபதி ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தனது உத்தரவில், ''இவ்வழக்கு தொடர்பாக நெல்லை நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களை மார்ச் 1 ல் தாக்கல் செய்ய வேண்டும்,'' என தெரிவித்தார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications