வீரப்பனுக்கு நினைவு மண்டபம்.. கட்டுகிறார் முத்துலட்சுமி
சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என்று அவரது மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் வீரப்பன். சந்தனக் கடத்தல்காரனாக, காட்டு ராஜாவாக கோலோச்சி வந்த வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலை சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள மூலக்காடு என்ற இடத்தில் அடக்கம் செய்தனர்.

தற்போது ஆண்டு தோறும் அந்த இடத்தில் ஏராளமான ஆதரவாளர்கள் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் வீரப்பனின் 10வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் முத்துலட்சுமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது கணவரின் நினைவை போற்றும் வகையில் அவருக்கு நினைவு மண்டபம் மற்றும் நினைவுத்தூண் அமைக்க திட்டமிட்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக கர்நாடக போலீசாரால் நான் கைது செய்யப்பட்டதால் அது முடியாமல் போனது. எனினும் விரைவில் எனது கனவை பூர்த்தி செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார்.
அனேகமாக வீரப்பன் புதைக்கப்பட்ட இடத்திலேயே நினைவிடம் கட்ட முத்துலட்சுமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் தமிழக காவல்துறை இதை அனுமதிக்குமா என்பது தெரியவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications