பணத்தட்டுப்பாடு.. நெல்லை-தூத்துக்குடியில் மட்டன் கடைகள் வெறிச்! அறுத்து வைத்த ஆடுகள் வீண்
பணத்தட்டுப்பாடு காரணமாக அறுத்து வைத்த ஆடுகளையும் வாங்க ஆளில்லாமல், நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில், மட்டன் கடைகள் வெறிச்சோடி கிடந்தன.
நெல்லை: பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பெரும்பாலான மட்டன் கடைகளில் கூட்டம் அறவே இல்லை. இதனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.
வழக்கமாக நெல்லை, தூத்துக்குடியில் உள்ள இறைச்சி கடைகளில் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும். ஆனால் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மட்டன் கடைகள் வியாபாரம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

பல கடைகளில் வியாபாரிகள் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து ஆடுகளை அறுத்து வைத்திருந்தனர். ஆனால் கூட்டம் இல்லாததால் ஒரு ஆட்டின் இறைச்சி கூட விற்னையாகவில்லை. வருகிற 16ம் தேதி கார்த்திகை மாதம் பிறப்பதால் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். இதனால் தை மாதம் வரை இறைச்சி வியாபாரம் மேலும் பாதிக்கும் என நினைக்கிறார்கள் வியாபாரிகள்.
இந்நிலையில் தற்போது பண பரிவர்த்தனைக்காக திடீர் புரோக்கர்கள் பண முதலைகளை குறிவைத்து இறங்கியுள்ளனர். 1000க்கு 100 கமிஷன் என்றும், லட்சக்கணக்கில் பணத்தை தனியார் வங்கி, நிதி நிறுவனங்களில் அதிகாரிகளின் உதவியுடன் மாற்று தருகிறோம் என்றும் அதற்கு 10 சதவீத கமிஷன் தர வேண்டும் என்றும் பேரம் வருவதாக கூறப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications