தூத்துக்குடி அருகே மடக்கப்பட்டது அமெரிக்காவின் பாதுகாப்பு நிறுவன கப்பல்!
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சுற்றிவளைக்கப்பட்டது அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவன கப்பல் என்றும் கடல் கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை பாதுகாப்பதற்காகவே ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி கடற்பரப்பில் கடலோர காவல்படையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சீனா மொழியிலான ‘சீ மேன் கார்டு ஓஹியோ' என்ற பெயர் பொறித்த மர்ம கப்பல் ஒன்று நடுக்கடலில் நின்று கொண்டிருந்தது.

இதைத் தொடர்ந்து அந்த கப்பல் சுற்றி வளைக்கப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டது. சீனா கப்பல் என்பதால் பல்வேறு துறை அதிகாரிகளும் தூத்துக்குடியில் முகாமிட்டு தீவிர விசாரணையையை நடத்தினர்.
கடைசியில் அமெரிக்காவின் தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவன கப்பல் அது என்றும் கடல்கொள்ளையர்களிடம் இருந்து கப்பல்களைப் பாதுகாக்கவே சர்வதேச சட்டவிதிகளின் படி ஆயுதங்களை கப்பலில் இருந்தோர் வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
விரைவில் இந்த கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications