கடையநல்லூரில் ஒருவர் அடித்து எரித்து கொலை.. திணறும் போலீசார்
நெல்லை மாவட்டம் கடையநல்லூர், மேலக்கடையநல்லூர் செல்லும் சாலையிலுள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே அட்டக்குளம் என்ற பகுதி உள்ளது .இந்த பகுதி எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும் குடியிருப்பு, ஆலயம் அமைந்த ப
நெல்லை: நெல்லை மாவட்டம் கடையநல்லூர், மேலக்கடையநல்லூர் செல்லும் சாலையிலுள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே அட்டக்குளம் என்ற பகுதி உள்ளது .இந்த பகுதி எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும் குடியிருப்பு, ஆலயம் அமைந்த பகுதியாகும்.
இந்த பகுதியில் அரசு மதுப்பானக்கடை,மற்றும் பார் ஆகியவை செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த குளத்தின் கரையில் ரத்தக்கறை இருந்துள்ளது.

அதனை பார்த்த சிலர் எட்டி பார்த்தபோது கொலை செய்யப்பட்டு எறிந்த நிலையில் ஆண் ஒருவரது பிணம் கிடந்துள்ளது. கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் சொல்லவே அவர்கள் விரைந்து வந்து பார்த்தனர்.காலை நேரமென்பதால் மக்கள் கூட்டமும் அதிகரிக்கத்தொடங்கியது. கொலைசெய்யப்பாட்டவர் யார் எந்த ஊரை சார்ந்தவர், எதற்காக அவரை கொலை செய்தார்கள் யார் கொலை செய்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாமல் காவலர்கள் திணறி வருகின்றனர்.
அந்த பகுதியினர் கூறும் போது போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி இல்லாததும், டாஸ் மாக் கடையை ஊருக்கு நடுவில் ஆபத்தான இடத்தில் வைத்து இருப்பதும், எப்போதும் சரக்கு வியாபாரம் கொடி கட்டி பறப்பதும் காரணம் என்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications