சொந்த கிராம மக்களை ரஜினிகாந்த் சந்திக்க வேண்டும்.. நாச்சிக்குப்பம் மக்கள் கோரிக்கை!
ரஜினிகாந்த்தின் சொந்த கிராமமான கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம் பகுதி மக்கள் ரஜினி தங்களை சந்திக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: ரஜினிகாந்தின் சொந்த கிராம மக்களாக இருப்பது மகிழ்ச்சி என கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த்தின் சொந்த கிராம மக்களான தங்களை சந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரஜினிகாந்த் கடந்த வராம் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தனது மூதாதையர் கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் என்றார்.

தான் பிறந்ததும் அங்கேதான் என்று கூறிய அவர், பிழைப்புக்காக தனது தந்தை கர்நாடகா சென்றதாக கூறினார். இந்நிலையில் ரஜினியின் சொந்த ஊரான நாச்சிக்குப்பம் பகுதி மக்கள் ரஜினியின் சொந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் சொந்த ஊர் மக்களான தங்களை சந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications