இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்... தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நாகை: கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த கோடியக்கரை மீனவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்களிடமிருந்த மீன்களை பறித்து சென்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்திலிருந்து ஏராளமான மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்களை அவர்கள் பிடித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இரும்பு ராடு, கம்பி உள்ளிட்ட பொருட்களை கொண்டு தாக்கியதில் நான்கு மீனவர்கள் படுகாயமடைந்தனர். மேலும் தமிழர்களின் படகுகளையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் சேதம் செய்தனர். இதனைத்தொடர்ந்து மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடற்கொள்ளையர்கள் அள்ளிச்சென்றனர்.

இதனைத்தொடர்ந்து மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் சக மீனவர்கள் அவர்களை மீட்டு அழைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் தவித்து வரும் தாங்கள் தற்போது கடற்கொள்ளையர்களின் பிடியிலும் சிக்கி தவிப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications