அட அப்ரண்டிசுகளா..... வீரவணக்கத்துக்கு அர்த்தம் தெரியாமல் போனதன் விபரீதத்தை பாருங்களே
சென்னை: தமிழக அரசியலில் கட்சி தலைமைகளை ஈர்ப்பதற்கு விதம் விதமாக சுவரொட்டி அடிக்கும் கலாசாரம் காலம் காலமாக இருந்து வருகிறது.. இந்த வகையில் ஜல்லிகட்டு நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 'ஆர்வகோளாறுகள்' அடித்த ஒரு போஸ்டர் வாசகங்கள் பெரும் விபரீதத்தை ஏற்படுத்திவிட்டது.
ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி சிலர் போர்க்கொடி தூக்கினர். இவர்களது வாதங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றமும் சில ஆண்டுகளுக்கு முன்னர் தடை விதித்தது.
மேலும் மத்திய அரசும் கரடி, சிங்கம், புலிகளைப் போல காட்சிபடுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளைகளை சேர்த்தது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை தமிழகத்தில் ஏற்பட்டது. ஆனால் சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கடந்த ஆண்டு இந்த நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிக்கவில்லை எனக் கூறி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. நடப்பாண்டிலாவது ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின.
இதனை ஏற்று மத்திய அரசும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாகப்பட்டினத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்றுதான் பெரும் விபரீதத்தை ஏற்படுத்திவிட்டது.
அந்த போஸ்டரின் தலைப்பே "ஜல்லிக்கட்டு வீரவணக்கங்கள்"
அத்துடன் நிற்கவில்லை அந்த ஆர்வகோளாறுகள்...
தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிகட்டுக்கு அனுமதி வழங்கிய 'உலகத் தலைவன்' மாண்புமிகு பிரதமர் மோடிஜி, மாண்புமிகு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவேட்கர், பெருமுயற்சி எடுத்து வெற்றிகண்ட குமரித் தங்கம், வீரத் தமிழன் பொன்னார் அவர்களுக்கு 'நன்றியை'யும் வீரவணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஒட்டிவிட்டனர்.
இவர்கள் "வீர" "வணக்கங்கள்" என்ற அர்த்தத்தில் போஸ்டர் அடித்தாலும் "வீரவணக்கம்" என்பது இறந்தவர்களுக்கு செலுத்துகிற அஞ்சலி என்பதை புரியாமல் அடித்துவிட்டால் பெரும் அதிர்ச்சியில் உறைந்துபோயினர் பொதுமக்கள்!












Click it and Unblock the Notifications