கனமழை: 2வது நாளாக காரைக்கால், நாகை, திருவாரூரில் விடுமுறை
Subscribe to Oneindia Tamil

இலங்கை மற்றும் தமிழகக் கடல் பகுதிக்கு இடையே தென் மேற்கு வங்கக் கடலில் அண்மையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது வலுவடைந்து தற்போது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.
இது அடுத்த சில நாள்களுக்குள் புயல் சின்னமாகவும் மாறவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புயல் சின்னம் வலுவடையும் போதுதான், அது எந்தத் திசையை நோக்கி நகரும் என்பது தெரிய வரும்.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால், தமிழகத்தின் நாகப்ப்ட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications