ஓகி புயல்... நாகப்பட்டினம் மீனவர்களை தேடும் பணி தீவிரம்

ஓகி புயலில் சிக்கி காணாமல் போன 25 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: ஓகி புயலில் சிக்கி காணாமல் போன 25 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மீனவர்கள் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகப்பட்டினம் அருகே உள்ள நம்பியார்நகரை சேர்ந்த மீனவர்கள் ஆகாஷ், வினிதன், பிரகாஷ், விஜய், வேல், மதன்குமார், மணிகண்டன், விஜயகுமார், குமார், வெற்றிசெல்வம், ஜெயக்குமார் உள்பட 35-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கேரளாவில் தங்கி மீன்பிடி தொழில் செய்வதற்காக சென்றதாக கூறப்படுகிறது.

Nagapattinam fishermen missing after Ockhi cyclone

இந்தநிலையில் ஓகி புயலால் ஒரு சில மீனவர்கள் கேரளாவில் இருந்து நாகைக்கு திரும்பி வந்து விட்டனர். ஆனால் 25 மீனவர்கள் மட்டும் இதுவரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து 25 மீனவர்களின் நிலை குறித்து தெரியாததால், அவர்களது உறவினர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து நம்பியார்நகர் மீனவ பஞ்சாயத்தார்கள், நாகை மீன்வளத்துறை இணை இயக்குனர் லீனாசெல்வி மற்றும் உதவி இயக்குனர் கங்காதரன் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட இணை இயக்குனர் லீனாசெல்வி, கேரளாவிற்கு சென்ற மீனவர்கள் குறித்து கேரள மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+