நாகர்கோவில் அருகே பிரேக் பிடிக்காத அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 28 பயணிகள் காயம்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: குமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவில் அருகே இரு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

நாகர்கோவில் அடுத்த, பள்ளந்துறை என்ற இடத்தில் இன்று மதியம் இரு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு பஸ்களிலும் பயணித்த 28 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ்சில் பிரேக் பிடிக்காததுதான் இந்த விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. தமிழக அரசு பஸ்கள் பராமரிப்பின்றி பாடாவதியாக காட்சியளிப்பதால்தான், இந்த விபத்து நடந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.












Click it and Unblock the Notifications