கடன் விவகாரம்: திரைப்பட தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு!
வாங்கிய கடனை திருப்பித் தராத வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்து வரும் திரைப்பட தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான கலைப்புலி தாணுவை கைது செய்ய நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் டேவிட் என்பவர் நீதிமன்றத்தில் தாணுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். தம்மிடம் வாங்கிய ரூ2 லட்சம் கடனை தாணு திருப்பித் தரவில்லை என்பது புகார்.

இதைவிசாரித்த நீதிமன்றம் டேவிட்டிடம் பணத்தை திருப்பித் தர தாணுவுக்கு உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் டேவிட்டுக்கு தாணு பணத்தைத் தரவில்லை.
இது குறித்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் டேவிட் முறையிட்டார். இதையடுத்து வரும் 28-ந் தேதிக்குள் தாணுவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications